இன்று நேபாளத்தில் உலங்கு வானுர்தி காணாமல் போயுள்ளது
#world_news
#Helicopter
#நேபாளம்
Mugunthan Mugunthan
2 years ago

இன்று நேபாளத்தில் ஒரு ஹெலிகாப்டர் காணாமல் போனதாக கிடைத்த தகவலையடுத்து விபத்தில் 5 பேர் உயிரிழந்தாக தெரிவிக்கப்பட்டது.
நேபாளத்தில் காத்மாண்டுவில் இருந்து சோலுகும்பு பகுதிக்கு 6 பேருடன் சென்ற 9என்எம்வி(9NMV) என்ற ஹெலிகாப்டரைக் காணவில்லை என இன்று (செவ்வாய்க்கிழமை) காலை தகவல் வெளியானது.
காலை 10.12 மணிக்கு தகவல் தொடர்பு துண்டிக்கப்பட்டதாகக் கூறப்படும் ஹெலிகாப்டரில் கேப்டன் மற்றும் 5 வெளிநாட்டவர்கள் என 6 பேர் பயணித்ததாகக் கூறப்பட்டது.
இந்நிலையில் ஹெலிகாப்டர், எவரெஸ்ட் சிகரத்தின் அருகே மரத்தின் மீது மோதி ஏற்பட்ட விபத்தில் 5 பேர் உயிரிழந்ததாகத் தெரிவிக்கப்பட்டுள்ளது.
இதனையடுத்து தேடுதலில்5 பேரின் உடல்கள் மீட்கப்பட்டுள்ளதாகவும் ஒருவரைத் தேடும் பணி நடைபெற்று வருவதாகவும் தகவல் வெளியாகியுள்ளது.



