ஜப்பானில் சீரற்ற வானிலை : 06 பேர் உயிரிழப்பு, மூவர் மாயம்!

#world_news #Lanka4 #Japan
Thamilini
2 years ago
ஜப்பானில் சீரற்ற வானிலை : 06 பேர் உயிரிழப்பு, மூவர் மாயம்!

ஜப்பானின் தென்மேற்கு தீவான கியூஷூவில் பெய்த கனமழை மற்றும் வெள்ளம் காரணமாக 06 பேர் உயிரிழந்துள்ளதுடன், மூவரை காணவில்லை என அந்நாட்டு ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன. 

ஜப்பான் வானிலை ஆய்வும் மையம் சீறற்ற வானிலை குறித்து கீழ் மட்ட எச்சரிக்கையை விடுத்துள்ளது. நிலச்சரிவு குறித்து மக்கள் அவதானமாக இருக்க வேண்டும் எனவும் கேட்டுக்கொண்டுள்ளது. 

சீறற்ற வானிலை காரணமாக ஆறுபேர் உயிரிழந்துள்ளதாகவும், மேலதிக சேதவிபரங்களை சரிபார்த்து வருவதாகவும், தலைமை அச்சரவை செயலாளர் ஹிரோகாசு மாட்சுனோ தெரிவித்துள்ளார். 

இதேவேளை சமீபத்திய நாட்களில் உலகம் முழுவதும் அதிக வெப்பம், மற்றும் மழை போன்ற பாதிப்புகள் ஏற்பட்டுள்ளன. காலநிலையில். ஏற்பட்டுள்ள மாற்றம் மக்களை அச்சமடைய செய்துள்ளமை குறிப்பிடத்தக்கது. 

இச்செய்திக்கு பிரதான அனுசரணை

Selva Zug Promotion

வீடியோ இங்கே

Subcribe Lanka4
Like Lanka4
Follow Lanka4
Follow Lanka4