உலக செயற்கை நுண்ணறிவு மாநாடு சீனாவில் நிகழ்ந்துள்ளது

செயற்கை நுண்ணறிவு அதாவது AI (Artificial Intelligent) உலகம் முழுக்க தற்போது வேகமாக நாட்டுக்கு நாடு வேகமாக போட்டி போட்டுக்கொண்டு பரவி வருகிறது.
இது கிட்டத்தட்ட அனைத்து துறைகளும் இந்த AI தொழில்நுட்பம் நுழைந்துவிட்டதை அடுத்து மனிதர்களுக்கு வேலைவாய்ப்பு குறைந்து வருவதாகவும் கூறப்படுகிறது
ஆனால் முன்னணி நிறுவனங்கள் AI தொழில்நுட்பத்தை பயன்படுத்தி வருவதால் மிகப் பெரிய அளவில் செலவு குறைகிறது என்றும் கூறப்பட்டுள்ளது. இந்த நிலையில் சீனாவில் உலக செயற்கை நுண்ணறிவு மாநாடு நடைபெற்றது.
மூன்று நாள் நடைபெற்ற இந்த மாநாட்டில் 32 தொழில்முறை திட்டங்கள் கையெழுத்து ஆகியுள்ளன. 400-க்கும் மேற்பட்ட கண்காட்சியாளர்கள் தங்கள் தயாரிப்புகளை இந்த மாநாட்டில் காட்சிப்படுத்திருந்தனர்.
இந்த மாநாட்டில் நோபல் பரிசு வென்றவர்கள் உட்பட 1400க்கும் மேற்பட்ட முக்கிய விருந்தினர்கள் கலந்து கொண்டுள்ளனர். இங்கு நிகழ்ந்த கால்பந்து விளையாட்டில் ரோபோக்கள் விளையாடியது அனைவரின் கவனத்தை ஈர்த்துள்ளது.



