காப்புறுதிச் சட்டங்களை மீளாய்வு செய்வதற்கு குழுவொன்று நியமிப்பு
#SriLanka
#Court Order
#Lanka4
#srilankan politics
#wijayadasa rajapaksha
Kanimoli
2 years ago
இலங்கையின் தற்போதைய காப்புறுதிச் சட்டங்களை மீளாய்வு செய்வதற்கு நீதியமைச்சர் கலாநிதி விஜயதாச ராஜபக்ஷவினால் குழுவொன்று நியமிக்கப்பட்டுள்ளது.
தற்போதைய காப்பீட்டுச் சட்டங்களை மறுஆய்வு செய்து, உலகளாவிய காப்பீட்டு விதிமுறைகளுக்கு இணையான வகையில் அவற்றை மேம்படுத்துவதே குழுவின் நோக்கமாகும். எனவே, குறித்த குழுவிற்கு பொதுமக்களின் கருத்துக்களை அனுப்புமாறு அமைச்சு கோரிக்கை விடுத்துள்ளது.
அத்தகைய முன்மொழிவுகள், legal@moj.gov.lk என்ற மின்னஞ்சல் முகவரிக்கு அல்லது எழுத்துப்பூர்வமாக அமைச்சுக்கு அனுப்புமாறு என அறிவிக்கப்பட்டுள்ளது.