நுவரெலியாவில் பஸ் நடத்துனர் மீது கத்தி குத்து தாக்குதல்
#Attack
#NuwaraEliya
#Fight
#Knife
Prasu
2 years ago
நுவரெலியா நகரில் பஸ் நடத்துனர் மீது கத்தி குத்து தாக்குதல் சம்பவம் ஒன்று இடம்பெற்றுள்ளது.
நுவரெலியா நகரில் பஸ் நடத்துனர் மீது கத்தி குத்தை மேற்கொண்டவர் பொலிஸில் சரணடைந்தார். குறித்த சம்பவம் இன்று இடம்பெற்றுள்ளது.
நடைபாதை வியாபாரிக்கு தாக்குதலுக்கு உள்ளான பஸ் நடத்துனருக்கும் இடையே இடம்பெற்ற வாக்குவாதம் இறுதியில் கத்திக்குத்தில் முடிவடைந்தது.
இதில் படுகாயமடைந்த நுவரெலியா பம்பரகலை தோட்டத்தை சேர்ந்த 33 வயதுடைய ஆறுமுகம் ஹாரியதாஸ் என்ற நபர் நுவரெலியா மாவட்ட வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளார்.
சம்பவத்தில் படுகாயமடைந்த பஸ் நடத்துனர் நுவரெலியா வைத்தியசாலையில் அனுமதிக்கப்ட்டுள்ளார்.