துப்பாக்கி வன்முறையை முடிவுக்கு கொண்டுவருவது பற்றி பைடன் கருத்து!

#world_news #Lanka4
Dhushanthini K
2 years ago
துப்பாக்கி வன்முறையை முடிவுக்கு கொண்டுவருவது பற்றி பைடன் கருத்து!

அமெரிக்காவில் அதிகரித்து வருகின்ற துப்பாக்கி கலாச்சாரத்தை கட்டுப்படுத்துவதற்கு அமெரிக்க ஜனாதிபதி ஜோ பைடன் நடவடிக்கை எடுத்துள்ளார். 

இதன்படி இது குறித்து வெள்ளை மாளிகை வெளியிட்டுள்ள அறிக்கையொன்றில், வார இறுதிநாளில் இடம்பெற்ற துப்பாக்கிச்சூட்டு சம்பவம் குறித்த தனது கவலையை வெளியிட்டுள்ளார். 

இந்த தாக்குதலில் ஏழு பேர் கொல்லப்பட்ட நிலையில், அவர்ளுக்கு பைடன் இரங்கல் தெரிவித்துள்ளார். 

கடந்த சில நாட்களாக, பிலடெல்பியா முதல் ஃபோர்ட் வொர்த், பால்டிமோர் முதல் லான்சிங், விசிட்டா முதல் சிகாகோ வரை அமெரிக்கா முழுவதும் உள்ள சமூகங்களில் சோகமான மற்றும் முட்டாள்தனமான துப்பாக்கிச் சூடுகளின் அலையை நமது நாடு மீண்டும் ஒருமுறை சந்தித்துள்ளது" என்று குறிப்பிட்டுள்ளார். 

அத்துடன்  நமது நாடு சுதந்திர தினத்தை கொண்டாடும் போது, ​​துப்பாக்கி வன்முறை முடிவுக்கு வர நாங்கள் பிராத்தனை செய்கிறோம் எனவும் அவர் மேலும் தெரிவித்துள்ளார்.  . 

உள்ளூராட்சி தேர்தலை விரைவில் நடத்துமாறு உத்தரவு!
உள்ளூராட்சி தேர்தலை விரைவில் நடத்துமாறு உத்தரவு!
உள்ளூராட்சி தேர்தலை விரைவில் நடத்துமாறு உத்தரவு!
உள்ளூராட்சி தேர்தலை விரைவில் நடத்துமாறு உத்தரவு!