மொட்டுக்குள் மீண்டும் பிளவு ; புதிய அரசியல் கட்சிக்கு முனைப்பு
#SriLanka
#Parliament
Mayoorikka
2 years ago
ஸ்ரீலங்கா பொதுஜன பெரமுனவின் அமைச்சர்கள் குழுவொன்று புதிய அரசியல் இயக்கமொன்றை உருவாக்குவது தொடர்பில் கலந்துரையாடல்களை ஆரம்பித்துள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளன.
அரசாங்கத்தில் பதவிகளை வகிக்கின்ற ஒரு சிலரே இவ்வாறான முனைப்புகளில் ஈடுபட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.
அந்த புதிய அரசியல் சக்தியை நிறுவுவதற்கு பல வலுவான அமைச்சரவை அமைச்சர்கள், இராஜாங்க அமைச்சர்கள் மற்றும் சில பாராளுமன்ற உறுப்பினர்கள் முன்னணியில் உள்ளனர்.
புதிய ஏற்பாடு குறித்து கடந்த சில மாதங்களாக அவ்வப்போது கூடி ஆலோசனை நடத்தி வருகின்றனர்.