நாளை முதல் வெளிநாட்டு சேவை கட்டணங்கள் அதிகரிக்கப்படும்

#SriLanka
Prathees
2 years ago
நாளை முதல் வெளிநாட்டு சேவை கட்டணங்கள் அதிகரிக்கப்படும்

நாளை முதல் அமுலுக்கு வரும் இலங்கை வெளிநாட்டு வேலைவாய்ப்பு பணியகத்தின் திருத்தப்பட்ட கட்டணங்கள் அறிவிக்கப்பட்டுள்ளன. 

 23 ஜூன் 2023 தேதியிட்ட 2337/27 என்ற அதிவிசேட வர்த்தமானி இலங்கை வெளிநாட்டு வேலைவாய்ப்புப் பணியகத்தின் பதிவுக் கட்டணங்கள் மற்றும் முகவர் புதுப்பித்தல் கட்டணங்களைத் திருத்தியுள்ளது. 

 இதேவேளை, வேலைக்காக வெளிநாடு செல்லும் ஒவ்வொரு இலங்கையர்களும் பணியகத்தில் பதிவு செய்வது கட்டாயமாக்கப்பட்டுள்ளது. 

 மேலும், பணியகம் ஒரு வருட காலத்திற்கு வெளிநாட்டு வேலைவாய்ப்பு நிறுவனத்தை நடத்துவதற்கான உரிமங்களை வழங்குகிறது. 

 நிறுவனம் தொடர்ந்து இயங்கினால், உரிமத்தை நீட்டிக்க பணியகத்தின் ஒப்புதலைப் பெறுவது சட்டத்தின் விதிகளின் கீழ் செய்யப்பட வேண்டும். 

 திருத்தப்பட்ட கட்டணங்கள் பின்வருமாறு. 

 1) வெளிநாட்டு வேலைவாய்ப்பு பணியகத்தின் பதிவு கட்டணம் ரூ.17,928.00 (வரிகளுடன்) புதிய மதிப்பு - ரூ.21,467.00 (வரிகளுடன்) 

 2) பதிவு புதுப்பித்தல் கட்டணம் தற்போதைய மதிப்பு - ரூ.3,774.00 (வரிகள் உட்பட) புதிய மதிப்பு - ரூ.4,483.00 (வரிகள் உட்பட) 

 3) வேலைவாய்ப்பு நிறுவனத்தின் உரிமத்தை புதுப்பிப்பதற்கான கட்டணம் ரூ.58,974.00 (வரிகளுடன்) மற்றும் புதிய கட்டணம் ரூ.117,949.00 (வரிகளுடன்).

உள்ளூராட்சி தேர்தலை விரைவில் நடத்துமாறு உத்தரவு!
உள்ளூராட்சி தேர்தலை விரைவில் நடத்துமாறு உத்தரவு!
உள்ளூராட்சி தேர்தலை விரைவில் நடத்துமாறு உத்தரவு!
உள்ளூராட்சி தேர்தலை விரைவில் நடத்துமாறு உத்தரவு!