கடலூர் மாவட்ட மீனவர்கள் கடலுக்குச் செல்ல வேண்டாம் என மீன்வளத் துறையினர் அறிவிப்பு
#India
#Tamil Nadu
#Tamil People
#Fisherman
#Fish
Mani
2 years ago
கடலூரில் மோசமான வானிலை காரணமாக மீனவர்கள் கடலுக்குச் செல்ல வேண்டாம் என மீன்வளத்துறை அறிவுறுத்தியுள்ளது.
கடல் காற்று 55-65கிமீ வேகத்தில் வீசக்கூடும் என வானிலை மையம் எச்சரித்ததால் மீன்வளத்துறை அறிவுறுத்தியிருக்கிறது. இன்று முதல் மறு அறிவிப்பு வரும் வரை மீனவர்கள் கடலுக்கு மீன்பிடிக்கச் செல்லக் கூடாதென கேட்டுக்கொள்ளப்பட்டுள்ளது. தமிழக வங்கக்கடல் பகுதியில் மோசமான வானிலை நிலவும் என வானிலை மையம் எச்சரித்திருந்தது.