சொந்த மகளை 25 முறை கத்தியால் குத்திக்கொலை செய்த தந்தை கைது
#India
#Tamilnews
#Breakingnews
#ImportantNews
Mani
2 years ago

குஜராத்தில் மொட்டை மாடியில் உறங்குவது தொடர்பான தகராறில், சொந்த மகளை 25 முறை கத்தியால் குத்திக்கொலை செய்த தந்தை கைது செய்யப்பட்டார். சூரத் நகரில் வாடகை வீடு ஒன்றில் ராமானுஜா என்பவர் தனது குடும்பத்தினருடன் வசித்து வந்தார்.
அந்த வீட்டின் மொட்டை மாடியில் ராமானுஜாவின் மகள் படுப்பது தொடர்பாக அவருக்கும், அவரது மனைவி ரேகாவுக்கும் சிறிய தகராறு ஏற்பட்டதாக தெரிகிறது. இதில் ஆத்திரமடைந்த அவர், சமையலறையில் இருந்த கத்தியை எடுத்து வந்து மனைவியை தாக்கியுள்ளார்.
தாயை காப்பாற்ற முயன்ற மகளையும் அவர் பல முறை கத்தியால் குத்தினார். சுற்றி இருந்தவர்கள் பெரும் சிரமப்பட்டு அவரை தடுத்து மற்றவர்களை காப்பாற்றினர். அங்கிருந்த தப்பி ஓடிய ராமானுஜாவை போலீசார் 2 நாள் தேடலுக்குப் பின் கைது செய்தனர்.



