இந்திய முட்டைகளை பொதுமக்களுக்கு விற்பனை செய்ய அனுமதி வழங்கப்படவில்லை!
#SriLanka
#India
#Egg
#Food
#Colombo
#Tamilnews
#sri lanka tamil news
#Lanka4
Mayoorikka
2 years ago

இந்தியாவில் இருந்து இறக்குமதி செய்யப்பட்ட முட்டைகளை சிறிலங்காவின் பொதுமக்களுக்கு விற்பனை செய்ய இன்னும் அனுமதி வழங்கப்படவில்லை என அரச வணிக பலநோக்கு கூட்டுத்தாபனம் அறிவித்துள்ளது.
அனுமதி கிடைக்கப் பெறும் பட்சத்தில் அது தொடர்பில் மக்களுக்கு அறிவிக்கப்படும் என்றும் அந்த கூடடுத்தாபனம் தெரிவித்துள்ளது..
தற்போது இறக்குமதி செய்யப்படும் முட்டைகள், வெதுப்பகங்களுக்கே வழங்கப்பட்டு வருகின்றன.
அதேநேரம், ஒரு மில்லியன் முட்டைகளை தாங்கிய கப்பல் ஒன்று கொழும்பு துறைமுகத்தை வந்தடைந்துள்ளது.
இந்த முட்டைகளை கால்நடை உற்பத்தி மற்றும் சுகாதார திணைக்களத்திடம் நாளைய தினம் ஒப்படைக்கவுள்ளதாக அரச வணிக பலநோக்கு கூட்டுத்தாபனம் தெரிவித்துள்ளது.



