தன்னிடம் மரியாதையுடன் பேசாத பொலிஸ் மா அதிபரை இடமாற்றம் செய்யுமாறு ஜனாதிபதியிடம் கோரிய எம்.பி
#Police
#Ratnapura
#Ranil wickremesinghe
#SriLanka
#sri lanka tamil news
#Lanka4
Prathees
2 years ago
இரத்தினபுரி மாவட்டத்துக்கான பிரதிப் பொலிஸ் மா அதிபரை இடமாற்றம் செய்யுமாறு ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்கவிடம் கோரியுள்ளதாகத் தெரிவித்த இரத்தினபுரி மாவட்ட நாடாளுமன்ற உறுப்பினர், தமக்கு அசௌகரியத்தை ஏற்படுத்தும் வகையில் பேசியதாகக் குறிப்பிட்டுள்ளார்.
ஒழுக்கமின்மை குற்றச்சாட்டின் பேரில் பொலிஸ் கான்ஸ்டபிள் ஒருவருக்கு இடமாற்றம் வழங்கப்பட்டுள்ளமை தொடர்பில் விசாரிப்பதற்காக இரத்தினபுரி மாவட்டத்திற்கு பொறுப்பான பிரதி பொலிஸ் மா அதிபருக்கு தொலைபேசியில் அழைப்பு விடுத்ததாகவும், எவ்வித பதிலும் இன்றி அந்த அழைப்பு துண்டிக்கப்பட்டதாகவும் அவர் ஜனாதிபதிக்கு கடிதம் மூலம் தெரிவித்துள்ளார்.
மக்கள் முன்னிலையில் தம்மை சங்கடப்படுத்தும் வகையில் பிரதிப் பொலிஸ் மா அதிபர் நடந்து கொண்டதாக அவர் தெரிவித்துள்ளார்.