அனைத்து துறைகளின் தொழிற்சங்கங்களும் இணைந்து இன்று கொழும்பில் ஆர்ப்பாட்டம் நடாத்த தீர்மானம்
#Protest
#Colombo
#SriLanka
#Lanka4
#sri lanka tamil news
#Tamilnews
Prathees
2 years ago

அனைத்து துறைகளின் தொழிற்சங்கங்களும் இணைந்து இன்று பிற்பகல் கொழும்பில் ஆர்ப்பாட்டமொன்றை ஏற்பாடு செய்துள்ளன.
அரசாங்கம் கொண்டு வரவுள்ள பயங்கரவாத எதிர்ப்பு சட்டமூலம், தொழிற்சங்க செயற்பாட்டாளர்களை ஒடுக்குதல், அரசாங்கத்தின் வரிக் கொள்கை உள்ளிட்ட பல விடயங்களுக்கு எதிர்ப்புத் தெரிவித்து இந்த போராட்டம் நடத்தப்படவுள்ளது.
இதேவேளை, கொடுப்பனவு பிரச்சினையின் அடிப்படையில் இன்று அலுவலக சேவைகள் மற்றும் வாடிக்கையாளர் சேவைகளில் இருந்து விலகுவதற்கு தேசிய நீர் வழங்கல் சபையின் தொழிற்சங்கங்கள் தீர்மானித்துள்ளன.



