ஆணைக்குழு விடுத்த கோரிக்கை தொடர்பில் கலந்துரையாடுவதற்காக பாராளுமன்ற விவகாரங்களுக்கான குழு இன்று கூடுகின்றது!
#SriLanka
#Sri Lanka President
#Parliament
#Meeting
#Election
#Election Commission
#Lanka4
Mayoorikka
2 years ago
உள்ளாட்சி தேர்தலை நடத்துவதற்கு தேவையான நிதி தொடர்பில் தலையிடுமாறு சபாநாயகரிடம் தேர்தல்கள் ஆணைக்குழு விடுத்த கோரிக்கை உள்ளிட்ட பல விடயங்கள் தொடர்பில் கலந்துரையாடுவதற்காக பாராளுமன்ற விவகாரங்களுக்கான குழு இன்று (1) பிற்பகல் 1.00 மணிக்கு சபாநாயகர் மஹிந்த யாப்பா அபேவர்தன தலைமையில் பாராளுமன்றத்தில் கூடவுள்ளது.
இந்த விடயம் தொடர்பில் சபாநாயகர் நேற்று ஐக்கிய மக்கள் சக்தி உள்ளிட்ட
பல அரசியல் கட்சிகளின் தலைவர்களுடன் கலந்துரையாடினார். அங்கு எடுக்கப்பட்ட முடிவுகள் குறித்தும் இங்கு விவாதிக்கப்படும் எனத் தெரிகிறது.