சிறந்த கொழுந்து பறிப்பாளருக்கான தெரிவில் சீதையம்மாவுக்கு 3 லட்சம் ரூபா பரிசு
#Tea
#SriLanka
#sri lanka tamil news
#Lanka4
#Tamil
#Tamilnews
Prathees
2 years ago

இன்று இடம்பெற்ற சிறந்த கொழுந்து பறிப்பாளருக்கான தெரிவில் சமரசெட் பிரதேசத்தை சேர்ந்த சீதையம்மாவுக்கு 3 லட்சம் ரூபா பரிசு வழங்கப்பட்டுள்ளது.

இப்போட்டில் 44பெண் தொழிலாளர்கள் பங்கேற்றிருந்தனர். கொழுந்து பறிக்க 20நிமிடங்கள் மட்டுமே வழங்கப்பட்டன.

குறித்த 20 நிமிடங்களுக்குள் இவர் 10கிலோ 450கிராம் தேயிலை கொழுந்து பறிந்திருந்தார். இவருக்கு மூன்று லட்சம் ரூபா காசோலையும் தங்கப்பதக்கமும் வழங்கப்பட்டது.



