கடந்த வருடம் மே 9 மற்றும் 10 தீவைப்புகளை சவேந்திர சில்வா தடுக்க வில்லை: நீதிமன்றில் மனுத்தாக்கல்

#Court Order #Bandula Gunawardana
Prathees
2 years ago
கடந்த வருடம் மே 9 மற்றும் 10 தீவைப்புகளை சவேந்திர சில்வா தடுக்க வில்லை: நீதிமன்றில் மனுத்தாக்கல்

ஸ்ரீலங்கா பொதுஜன பெரமுன ஆதரவாளர்கள் குழு ஒன்று கடந்த வருடம் மே மாதம் 9ஆம் திகதி காலிமுகத்திடலில் கோட்டா கோ கம போராட்ட களத்தில் மேற்கொள்ளப்பட்ட காட்டுமிராண்டித்தனமான தாக்குதல்களின் பின்னர் அமைச்சர்கள், அரசியல்வாதிகள் மற்றும் பாராளுமன்ற உறுப்பினர்களின் வீடுகள் மற்றும் சொத்துக்களை எரித்து சேதப்படுத்துவதை தடுப்பதற்கு உரிய நடவடிக்கை எடுக்காத இராணுவ தளபதி சவேந்திர சில்வா, முப்படைகளின் பிரதானி பொலிஸ் மா அதிபர் உள்ளிட்ட பிரதிவாதிகளுக்கு எதிராக உரிய விசாரணை நடத்தப்பட வேண்டுமென அமைச்சர் பந்துல குணவர்தன கோரிக்கை விடுத்துள்ளார்.

அமைச்சர் பந்துல குணவர்தன, கோகிலா குணவர்தன, காமினி லோககே உள்ளிட்ட 39 பேர் தாக்கல் செய்த மனுவை ஆட்சேபனைகளை தாக்கல் செய்வதற்காக மே 22ஆம் திகதிக்கு ஒத்திவைக்க மேன்முறையீட்டு நீதிமன்றம் நேற்று (24) உத்தரவிட்டது.

மே 9 மற்றும் 10 ஆம் திகதிகளில் நாடு முழுவதும் அரசியல்வாதிகள் மற்றும் ஏனையோரின் வீடுகள் மற்றும் சொத்துக்கள் அழிக்கப்பட்டமை புலனாய்வுப் பற்றாக்குறையால் இடம்பெற்றதா என்பதை ஆராய்ந்து அறிக்கையிட முன்னாள் ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ஷவினால் நியமிக்கப்பட்ட முன்னாள் கடற்படைத் தளபதி வசந்த கர்ணகொட தலைமையிலான மூவரடங்கிய குழு பாதுகாப்புப் படையினர் மற்றும் மாநில புலனாய்வு அமைப்புகளின் பரிந்துரை அறிக்கையின் நகல் நேற்று (24ம் திகதி) நீதிமன்றத்தில் சமர்ப்பிக்கப்பட்டது.

பொலிஸ் விசேட அதிரடிப்படை மற்றும் முப்படைகளின் பயிற்றப்பட்ட பாதுகாப்புப் படையினரை வரவழைத்து இவ்வாறான தாக்குதல்களைத் தடுப்பதற்கு பாதுகாப்புப் படைகளின் பதில் பிரதானியாகவும் முப்படைகளின் இராணுவத் தளபதியாகவும் கடமையாற்றிய திரு.சவேந்திர சில்வா போதுமான பங்களிப்பை வழங்கவில்லை. எனவே, அவருக்கு எதிராக குற்றப் புலனாய்வுப் பிரிவினர் விசாரணை நடத்தப்பட வேண்டும் எனவும், அந்தக் குழுவின் அறிக்கையை, வசந்த கர்ணகொட சார்பில் ஆஜரான ஜனாதிபதி சட்டத்தரணி உதித ஒலஹேவா நீதிமன்றில் சமர்ப்பித்துள்ளதாகவும் நீதிமன்றில் தெரியவந்துள்ளது. 

வழக்கு விசாரணைக்கு முந்தைய நாள் வெளியிடப்பட்ட நோட்டீஸின் படி, வழக்கில் அனைத்து பிரதிவாதிகள் சார்பாக வழக்கறிஞர்கள் ஆஜராகினர்.

முன்னாள் பிரதமர் மகிந்த ராஜபக்ச சார்பில் ஆஜரான ஜனாதிபதி சட்டத்தரணி திரு.ரொமேஷ்த சில்வா, தமது கட்சிக்காரர் சார்பாக எழுத்துமூலமான ஆட்சேபனைகளையல்ல, எழுத்துமூலமான வாக்குமூலங்களை நீதிமன்றில் சமர்ப்பிக்க எதிர்பார்ப்பதாக நீதிமன்றத்திற்கு அறிவித்தார்.

மனுதாரர் தரப்பில் ருக்ஷான் சேனாதீரவுடன் ஜனாதிபதி சட்டத்தரணி சஞ்சீவ ஜயவர்தன ஆஜராகியிருந்தார்.

உள்ளூராட்சி தேர்தலை விரைவில் நடத்துமாறு உத்தரவு!
உள்ளூராட்சி தேர்தலை விரைவில் நடத்துமாறு உத்தரவு!
உள்ளூராட்சி தேர்தலை விரைவில் நடத்துமாறு உத்தரவு!
உள்ளூராட்சி தேர்தலை விரைவில் நடத்துமாறு உத்தரவு!