மரண தண்டனை குறித்து ஜனாதிபதியின் கருத்து நீதிமன்றத்திற்கு தெரிவிப்பு!
#SriLanka
#Sri Lanka President
#Ranil wickremesinghe
#sri lanka tamil news
#Lanka4
Mayoorikka
2 years ago

எந்தவொரு நபரையும் தூக்கிலிடுமாறு நாடளாவிய ரீதியில் எந்தவொரு நீதிமன்றமும் வழங்கிய உத்தரவை நிறைவேற்ற மாட்டோம் என ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்க தமக்கு அறிவித்துள்ளதாக சட்டமா அதிபர் உச்ச நீதிமன்றில் தெரிவித்துள்ளார்.
முன்னாள் மைத்திரிபால சிறிசேன மரண தண்டனைக்கு எதிராக தாக்கல் செய்யப்பட்ட அடிப்படை உரிமை மீறல் மனுவை பரிசீலித்த போதே சட்டமா அதிபர் சார்பில் ஆஜரான மேலதிக சொலிசிட்டர் ஜெனரல் மெரில் பிரலே இந்த அறிவித்தலை விடுத்தார்.



