ருஹுணு பல்கலைக்கழகத்தின் உபவேந்தருக்கு எதிரான மோதல் தீவிரம்
#SriLanka
#Protest
#Lanka4
#sri lanka tamil news
#students
#Tamilnews
Prathees
2 years ago

ருஹுனு பல்கலைக்கழக உபவேந்தர் பேராசிரியர் சுஜீவ அமரசேனவை அந்தப் பதவியில் இருந்து நீக்குமாறு கோரி. இன்று பிற்பகல் பல்கலைக்கழகத்திற்கு முன்பாக மாணவர்கள் மற்றும் ஆசிரியர்கள் இணைந்து ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்.
துணைவேந்தரின் தன்னிச்சையான ஆட்சியால் பல்கலைக்கழக மாணவர்களும் விரிவுரையாளர்களும் கடும் நெருக்கடிக்கு உள்ளாகியுள்ளதாக ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்ட மக்கள் தெரிவித்தனர்.
அந்தப் பல்கலைக்கழகத்தின் பேராசிரியரான ரொஹான் லக்சிறியின் அலுவலகத்தில் விஷ வாயு போன்ற விஷக் கலவை வெளியேறிய சம்பவம் அண்மையில் பதிவாகியுள்ளது.
இச்சம்பவம் பல்கலைக்கழக ஆசிரியர்களை வேட்டையாடும் சதி என்று கூறி மாணவர்களும் ஆசிரியர்களும் இன்று போராட்டத்தில் ஈடுபட்டனர்.



