அத்தியாவசிய சத்திரசிகிச்சைகள் பிற்போடப்படும் அபாயம்! அரச வைத்திய அதிகாரிகள் சங்கம் எச்சரிக்கை
#SriLanka
#doctor
#Hospital
#sri lanka tamil news
#Tamilnews
#Lanka4
Mayoorikka
2 years ago
அரசாங்க வைத்தியசாலைகளில் மேற்கொள்ளப்படும் அத்தியாவசிய சத்திரசிகிச்சைகளுக்கு முன்னுரிமை வழங்கப்படுவதனால் ஏனைய சத்திரசிகிச்சைகள் பிற்போடப்பட்டமை சுகாதார அதிகாரிகளின் தவறின் காரணமாக என அரச வைத்திய அதிகாரிகள் சங்கம் தெரிவித்துள்ளது.
தற்போதைய சூழ்நிலையில் எதிர்காலத்தில் அத்தியவசிய சத்திரசிகிச்சைகள் கூட பிற்போடப்படும் அபாயம் காணப்படுவதாக சங்கத்தின் ஊடகப் பேச்சாளர் டொக்டர் சமில் விஜேசிங்க தெரிவித்துள்ளார்.
இதற்கிடையில், செய்தி அறிவிப்பின் பின்னர் ஒளிபரப்பாகும் நெத் எப் பலும்கல நிகழ்ச்சியில் மருந்துகள் மற்றும் மருத்துவ உபகரண தட்டுப்பாடு காரணமாக ஏற்பட்டுள்ள பிரச்சனைகள் குறித்து விவாதிக்கப்படும்.