இலங்கையில் பல நகரங்களில் காற்று மாசுபாடு அதிகரிப்பு
#Climate
#SriLanka
Prathees
2 years ago
பல நகரங்களில் காற்று மாசு அதிகரித்து வருகிறது. இந்த நாட்டில் உள்ள காற்று மாசு அளவீடுகள் தீவின் பல பகுதிகளில் காற்று மாசுபாடு அதிகரித்துள்ளதை சுட்டிக்காட்டுகிறது.
தற்போது, நாட்டின் பல பகுதிகளில் காற்றின் தரக் குறியீடு 150 முதல் 170 வரை உள்ளது.
தற்போது, கம்பஹா மாவட்டத்தின் காற்றின் தர சுட்டெண் மதிப்பு 169, யாழ்ப்பாண மாவட்டம் 168, நீர்கொழும்பு 157, கொழும்பு மாவட்டம் 153, அம்பலாந்தோட்டை 151 ஆக உள்ளது.
இதுபோன்ற சூழ்நிலையில் சுவாச நோய் உள்ளவர்கள், சிறு குழந்தைகள், முதியவர்கள் மற்றும் கர்ப்பிணி தாய்மார்கள் பாதுகாக்கப்பட வேண்டும் என்று மருத்துவர்கள் கூறுகின்றனர்.