நாட்டில் கொண்டாடுவதற்கு பெரிய சுதந்திரம் இல்லை: 200 மில்லியன் ரூபாவை அர்த்தமுள்ளதாக்க கோரிக்கை
#SriLanka
#Sri Lanka President
#Parliament
Mayoorikka
2 years ago

நாட்டில் கொண்டாடுவதற்கு பெரிய சுதந்திரம் இல்லை சுதந்திர தினத்தை கொண்டாடுவதற்கு செலவிடப்படும் பணத்தினை நல்ல விடயத்திற்கு பயன்படுத்துமாறு எங்கள் மக்கள் சக்தி கட்சியின் பாராளுமன்ற உறுப்பினர் அத்துரலியே ரத்தின தேரர் பாராளுமன்றத்தில் கோரிக்கை விடுத்தார்.
சுதந்திர தினத்தை கொண்டாடுவதற்கு செலவிடப்படும் 200 மில்லியன் ரூபாவை அர்த்தமுள்ள விடயத்திற்கு பயன்படுத்துமாறும் நாட்டு மக்களின் பொருளாதாரத்தை கட்டியெழுப்பும் வேலைத்திட்டத்தை அறிவிக்காமல் பணத்தை செலவு செய்வது நகைச்சுவை எனவும் ரதன தேரர் மேலும் தெரிவித்துள்ளார்.



