இந்திய வெளியுறவுத்துறை அமைச்சர் மாலைதீவு மற்றும் இலங்கைக்கு விஜயம்
#India
Prathees
2 years ago

இந்திய வெளியுறவுத்துறை அமைச்சர் எஸ். ஜெய்சங்கர் இன்று புதன்கிழமை முதல் மாலைதீவு மற்றும் இலங்கைக்கு மூன்று நாள் பயணத்தை ஆரம்பிப்பதாக இந்திய வெளியுறவுத்துறை தெரிவித்துள்ளது.
இந்தியாவின் இரண்டு முக்கிய கடல்சார் அண்டை நாடுகளுடனான இருதரப்பு ஈடுபாட்டை மேலும் விரிவுபடுத்துவதற்காக இநடத விஜயம் மேற்கொள்ளப்படவுளடளதாக தெரிவிக்கப்படுகிறது.
இதன்படி ஜெய்சங்கரின் முதலில் மாலைதீவுக்கு இன்று செல்கிறார்.
அங்கு அவர் இருதரப்பு ஒத்துழைப்பை மேம்படுத்த பல ஒப்பந்தங்களில் கையெழுத்திடுவார்.
இதனையடுத்து இலங்கைக்கு நாளையதினம் பயணிக்கும் ஜெய்சங்கர்இ இலங்கையின் கடன் மறுசீரமைப்பு விடயம் தொடர்பில் இந்தியாவின் ஆதரவை வெளிப்படுத்துவார் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.
அத்துடன் இரண்டு முக்கிய இருதரப்பு உடன்படிக்கைகளிலும் கைச்சாத்திடுவார் என்று அறிவிக்கப்பட்டுள்ளது.



