காலி வீதியை மறித்து பல்கலைக்கழக மாணவர்கள் போராட்டம்!
#SriLanka
#Protest
#Colombo
#Tamil Student
Mayoorikka
2 years ago

வசந்த முதலிகேவை விடுதலை செய்யக் கோரி பல்கலைக்கழகங்களுக்கு இடையிலான மாணவர் ஒன்றியம் ஏற்பாடு செய்திருந்த போராட்டம் காலி வீதியை வந்தடைந்தவுடன் அங்கு பதற்ற நிலை ஏற்பட்டுள்ளது.
தடுப்புக் காவலில் வைக்கப்பட்டுள்ள பல்கலைக்கழக மாணவர் ஒன்றியத்தின் அழைப்பாளரும் காலிமுகத்திடல் ஆர்ப்பாட்ட செயற்பாட்டாளருமான வசந்த முதலிகேவை உடனடியாக விடுதலை செய்யுமாறு ஆர்ப்பாட்டக்காரர்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.



