சீனாவின் துணிப் பொதிகள் இலங்கையிடம் கையளிக்கப்பட்டன

#China #School
Prathees
2 years ago
சீனாவின் துணிப் பொதிகள் இலங்கையிடம் கையளிக்கப்பட்டன

நாடு 8,862,990 மீட்டர் துணியை சீன அரசாங்கத்திடமிருந்து மானியமாகப் பெற்றுள்ளது, 2023 ஆம் ஆண்டில் பள்ளி சீருடைத் தேவையில் 70% பூர்த்தி செய்யப்பட்டது.

இலங்கைக்கான பதில் சீனத் தூதுவர் திரு. ஹு வெய், கொழும்பு துறைமுக வளாகத்தில் கல்வி அமைச்சர் கலாநிதி சுசில் பிரேமஜயந்தவிடம் துணிப் பொதிகளை உத்தியோகபூர்வமாக கையளித்தார்.

மாணவர்களுக்கு நேரடியாக வழங்கக்கூடிய வகையில் வெட்டி, பொதி செய்து, லேபிளிடப்பட்ட துணியில் 1/3 பங்கு இலங்கையில் ஏற்கனவே கிடைத்துள்ளதுடன், எஞ்சிய துணிகள் எதிர்வரும் காலங்களில் பெற்றுக்கொள்ளப்படும்.

நாடளாவிய ரீதியில் உள்ள அனைத்து அரச மற்றும் அரச உதவி பெறும் பாடசாலைகளுக்கும் பிரிவேனில் கல்வி கற்கும் 41 இலட்சம் சிறார்கள் மற்றும் துறவிகளுக்கும் 2023 ஆம் ஆண்டுக்கான பாடசாலை சீருடைகள் மார்ச் 20 ஆம் திகதிக்குள் வழங்கப்படும் என கல்வி அமைச்சர் கலாநிதி சுசில் பிரேமஜயந்த இங்கு தெரிவித்தார்.

இலங்கையின் பொதுப் பாடசாலை மதிய உணவுத் திட்டத்திற்காக சீன அரசாங்கத்தினால் பல சந்தர்ப்பங்களில் பாகங்களாக வழங்கப்பட்ட 10,000 மெற்றிக் தொன் அரிசி தற்போது முழுமையாக வழங்கப்பட்டுள்ளதாக பதில் சீனத் தூதுவர் கல்வி அமைச்சருக்கு உத்தியோகபூர்வமாக அறிவித்தார்.

உள்ளூராட்சி தேர்தலை விரைவில் நடத்துமாறு உத்தரவு!
உள்ளூராட்சி தேர்தலை விரைவில் நடத்துமாறு உத்தரவு!
உள்ளூராட்சி தேர்தலை விரைவில் நடத்துமாறு உத்தரவு!
உள்ளூராட்சி தேர்தலை விரைவில் நடத்துமாறு உத்தரவு!