இரண்டு மாவட்டங்களுக்கு மண்சரிவு எச்சரிக்கை
Prabha Praneetha
2 years ago

நாட்டில் நிலவும் கடும் மழை காரணமாக இரண்டு மாவட்டங்களுக்கு மண்சரிவு எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளதாக தேசிய கட்டிட ஆராய்ச்சி நிறுவனம் தெரிவித்துள்ளது.
அதன்படி கண்டி மற்றும் மாத்தளை மாவட்டங்களுக்கு இந்த மண்சரிவு எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.
இதன்காரணமாக குறித்த பகுதிகளில் வசிப்பவர்கள் அவதானமாக இருக்குமாறும் தேசிய கட்டிட ஆராய்ச்சி நிறுவனம் எச்சரிக்கை விடுத்துள்ளமை குறிப்பிடத்தக்கது.



