இலங்கையில் பிறப்புச் சான்றிதழில் பல திருத்தங்களை மேற்கொள்ள நடவடிக்கை
Kanimoli
2 years ago

இலங்கையில் தனிநபர் அடையாளமாக விளங்கும் பிறப்புச் சான்றிதழில் பல திருத்தங்களை மேற்கொள்ள நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது.
இந்த தகவலை பதிவாளர் நாயகம் திணைக்களம் வெளியிட்டுள்ளது.
இதன்படி, ஒருவருக்கான தேசிய அடையாள அட்டை இலக்கம் பிறக்கும் போதே புதிய பிறப்புச் சான்றிதழில் பதியப்படவுள்ளதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.
மேலும், தற்போது காணப்படும் பெற்றோரின் திருமணம் தொடர்பான தகவல்களை பதிவு செய்யும் பகுதியும் நீக்கப்படவுள்ளது.



