கடன் பிரச்சினை தொடர்பில் கலந்துரையாடுவதற்காக சீன அபிவிருத்தி வங்கியின் பிரதிநிதிகள் குழுவொன்று இலங்கை வருகை
Mayoorikka
2 years ago
இலங்கை எதிர்நோக்கும் கடன் பிரச்சினை தொடர்பில் கலந்துரையாடுவதற்காக சீன அபிவிருத்தி வங்கியின் பிரதிநிதிகள் குழுவொன்று இலங்கை வந்துள்ளது.
நிதி இராஜாங்க அமைச்சர் ஷெஹான் சேமசிங்கவை சந்தித்து கலந்துரையாடியதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
இலங்கையின் அபிவிருத்தி நடவடிக்கைகளுக்கான பிரதான நிதி உதவியாளராக சீன அபிவிருத்தி வங்கி கருதப்படுகிறது.