இடைக்கால வரவு செலவுத் திட்டம் இன்று பாராளுமன்றத்தில்

Prathees
2 years ago
 இடைக்கால வரவு செலவுத் திட்டம் இன்று பாராளுமன்றத்தில்

இந்த நிதியாண்டின் (2022) மீதமுள்ள இடைக்கால வரவு செலவுத் திட்டம் ஆவணம் இன்று  மதியம் 12:00 மணிக்கு தாக்கல் செய்யப்படும். 1.00 மணிக்கு ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்கவினால் பாராளுமன்றத்தில் சமர்ப்பிக்கப்படவுள்ளது.

இந்த வரவு செலவுத் திட்டத்தின் இரண்டாம் வாசிப்பின் ஆரம்ப உரை இன்று பிற்பகல் 1.00 மணி முதல் 2.00 மணி வரை ஜனாதிபதியினால் நிகழ்த்தப்படவுள்ளது.

நாட்டின் வரலாற்றில் மிக மோசமான பொருளாதார நெருக்கடிக்கு முகங்கொடுத்துள்ள நிலையில்இ அனைத்து தேவையற்ற மற்றும் அவசரமற்ற அரச செலவீனங்களை மட்டுப்படுத்துதல் மற்றும் வீழ்ச்சியடைந்துள்ள அரச வரி வருமானத்தை அதிகரிப்பது தொடர்பான முன்மொழிவுகள் இந்த இடைக்கால வரவு செலவுத் திட்டத்தில் முன்வைக்கப்படவுள்ளதாக 'திவயின' தெரிவிக்கின்றது.

ஜனாதிபதியாக ரணில் விக்கிரமசிங்க நியமிக்கப்பட்டதன் பின்னர் புதிய அரசாங்கமாக 2022 நிதியாண்டின் எஞ்சிய காலப்பகுதிக்கு கடந்த ஆண்டு (2021) நவம்பர் மாதம் நிறைவேற்றப்பட்ட ஒதுக்கீட்டுச் சட்டத்தின் திருத்தமாக இந்த ஒதுக்கீட்டுச் சட்டமூலம் ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்கவினால் நிதி அமைச்சராக முன்வைக்கப்படுகிறது. 

2022 ஆம் ஆண்டிற்கான முன்னர் அங்கீகரிக்கப்பட்ட ஒதுக்கீட்டுச் சட்டத்தின் கீழ் ஒதுக்கப்பட்ட பணம் அந்தந்த அமைச்சுகளின் குறிப்பிட்ட தலைவர்களின் கீழ் குறிப்பிடப்பட்ட திட்டங்களுக்குச் செலவிடப்படாததால்இ இந்தப் புதிய திருத்தத்தின் கீழ் அந்தப் பணத்தை மேலும் செலவிடுவதற்கு ஒதுக்கீட்டுச் சட்டம் அதிகாரம் வழங்கியுள்ளது.

உள்ளூராட்சி தேர்தலை விரைவில் நடத்துமாறு உத்தரவு!
உள்ளூராட்சி தேர்தலை விரைவில் நடத்துமாறு உத்தரவு!
உள்ளூராட்சி தேர்தலை விரைவில் நடத்துமாறு உத்தரவு!
உள்ளூராட்சி தேர்தலை விரைவில் நடத்துமாறு உத்தரவு!