தொண்டைமானாறு செல்வச்சந்நிதி முருகன் ஆலயத்தின் வருடாந்த மஹோற்சவம் கொடியேற்றத்துடன் ஆரம்பம்!

Mayoorikka
2 years ago
தொண்டைமானாறு செல்வச்சந்நிதி முருகன் ஆலயத்தின் வருடாந்த மஹோற்சவம் கொடியேற்றத்துடன் ஆரம்பம்!

வரலாற்றுப் புகழ்பெற்ற தொண்டைமானாறு செல்வச்சந்நிதி முருகன் ஆலயத்தின் வருடாந்த மஹோற்சவம் நேற்று  27அம் திகதி சனிக்கிழமை கொடியேற்றத்துடன் ஆரம்பமாகியது.

பிரதம குரு சிவசிறி உலக குருநாதன் ஐயர் தலைமையில் பூசைகள் இடம்பெற்று மாலை 4:30 மணியளவில் கொடியேற்றப்பட்டு மஹோற்சவம் ஆரம்பமானது.

செப்டம்பர் 6அம் திகதி கைலாச வாகனமும், செப்டம்பர் 8அம் திகதி சப்பறத் திருவிழாவும், செப்டம்பர் 9அம் காலை 9 மணிக்கு தேர் திருவிழாவும் இடம்பெறவுள்ளது.

செப்டம்பர் 10அம் திகதி காலை தீர்த்தத் திருவிழாவும் அன்று மாலை 6 மணிக்கு மௌனத் திருவிழாவும் செப்டம்பர் 11அம் திகதி பூக்காரர் பூசையும் நடைபெறவுள்ளது.

உள்ளூராட்சி தேர்தலை விரைவில் நடத்துமாறு உத்தரவு!
உள்ளூராட்சி தேர்தலை விரைவில் நடத்துமாறு உத்தரவு!
உள்ளூராட்சி தேர்தலை விரைவில் நடத்துமாறு உத்தரவு!
உள்ளூராட்சி தேர்தலை விரைவில் நடத்துமாறு உத்தரவு!