ஜனாதிபதி வீட்டுக்கு தீ வைப்பு- சந்தேக நபர்களுக்கு நீதிமன்றம் வழங்கிய உத்தரவு
Mayoorikka
2 years ago

ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்கவின் தனிப்பட்ட வீடு எரிக்கப்பட்ட சம்பவம் தொடர்பில் கைது செய்யப்பட்டு, விளக்கமறியலில் வைக்கப்பட்டுள்ள 7 சந்தேக நபர்களையும் செப்டெம்பர் 7 ஆம் திகதி வரை விளக்கமறியலில் வைக்குமாறு கொழும்பு கோட்டை நீதவான் திலின கமகே உத்தரவிட்டுள்ளார்.
சந்தேகநபர்களை பிணையில் விடுவிப்பது தொடர்பில், ஆஜரான மேலதிக சொலிசிட்டர் ஜெனரல் திருமதி. ஹரிபிரியா ஜயசுந்தர முன்வைத்த ஆட்சேபனைகளை கருத்திற் கொண்டே நீதவான் இந்த உத்தரவை பிறப்பித்துள்ளமை குறிப்பிடத்தக்கது.



