யாழில் அரசாங்கத்திற்கு எதிராக துண்டு பிரசுரங்கள் விநியோகிக்கும் செயற்பாடு ஆரம்பம்
Kanimoli
2 years ago

யாழில் அரசாங்கத்திற்கு எதிராக துண்டு பிரசுரங்கள் விநியோகிக்கும் செயற்பாடு முன்னெடுக்கப்பட்டுள்ளது.
இன்று காலை 10.30 மணியளவில் மக்கள் போராட்ட இயக்கத்தினரால் இந்த போராட்டம் முன்னெடுக்கப்பட்டுள்ளது.
இது தொடர்பில் மேலும் தெரியவருகையில்,
யாழ்ப்பாணத்தில் மக்கள் போராட்ட இயக்கம் எனும் அமைப்பு இந்த துண்டு பிரசுர விநியோகத்தை முன்னெடுத்துள்ளது.
அந்த துண்டு பிரசுரத்தில் பஞ்சத்தின் தந்தைக்கு - மத்திய வங்கி திருடனுக்கு மேலும் இடமளிப்பதா? எனும் தலைப்பிலான துண்டுப் பிரசுரங்களே இதன்போது விநியோகிக்கப்பட்டது.
யாழ்ப்பாணம் மத்திய பேருந்து நிலையத்தில் இந்த துண்டுப் பிரசுரங்கள் பொதுமக்களுக்கு விநியோகிக்கப்பட்டன.



