சவேந்திரசில்வா பதவியிலிருந்து மாற்றலானபோது ஆற்றிய பிரியாவிடை உரையால் ராஜபக்ஸ குடும்பத்தினர் கலக்கம்

Kanimoli
4 years ago
சவேந்திரசில்வா பதவியிலிருந்து மாற்றலானபோது ஆற்றிய பிரியாவிடை உரையால் ராஜபக்ஸ குடும்பத்தினர் கலக்கம்


முன்னாள் இராணுவத் தளபதி சவேந்திரசில்வா பதவியிலிருந்து மாற்றலானபோது ஆற்றிய பிரியாவிடை உரையால் ராஜபக்ஸ குடும்பத்தினர் கலக்கமடைந்துள்ளனர் என்று ஜே.வி. பி. ஆதரவு இணையம் ஒன்று செய்தி வெளியிட்டுள்ளது.

மேலும், இராணுவத்தளபதி பதவியில் இருந்து மாற்றலான ஜெனரல் சவேந்திர சில்வா கடந்த செவ்வாய்க்கிழமை தனது பிரியாவிடை உரையை ஆற்றியிருந்தார்.

அதில், “எனது பதவிக் காலத்தில், சந்தேகத்துக்கிடமான நடத்தை, நெகிழ்வான ஆளுமை அல்லது நிச்சயமற்றதன்மை ஆகியவற்றை நான் ஒருபோதும் கொண்டிருக்கவில்லை.

இராணுவத்தளபதி என்ற வகையில், நாட்டு மக்கள் எங்களிடம் எதிர்பார்க்கும் சேவையை வழங்கவோ அல்லது சவாலான காலங்களில் இராணுவத்தின் கண்ணியம் மற்றும் நற்பெயருக்கு களங்கம் ஏற்படுத்தவோ நான் ஒருபோதும் அனுமதிக்கவில்லை.

 
ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ஸவின் ஆளுமை பல்வேறு வழிகளில் அம்பலப்படுத்தப்பட்டதாக பரவலாக ஒரு கருத்து நிலவுகின்றது.

குறிப்பாக கோட்டாபய இராணுவத்தை விட்டு வெளியேறி அமெரிக்காவுக்கு தப்பிச் சென்றமை தொடர்பில் சமூக ஊடகங்களில் மறுபரிசீலனை செய்யப்பட்டுள்ளது - என்றும் அவர் தெரிவித்திருந்தார். 

இச்செய்திக்கு பிரதான அனுசரணை

Selva Zug Promotion

வீடியோ இங்கே

Subcribe Lanka4
Like Lanka4
Follow Lanka4
Follow Lanka4