நிட்டம்புவ நகர மையத்தில் துப்பாக்கி சூடு: மூவர் காயம்
Mayoorikka
3 years ago

நிட்டம்புவை பகுதியில் நிலவிய பதற்ற நிலையையடுத்து நடத்தப்பட்ட துப்பாக்கிப் பிரயோகத்தில் மூவர் காயமடைந்துள்ளனர். ஒருவர் கவலைக்கிடம் என்றும் தகவல் வெளியாகியுள்ளது.
பாதிக்கப்பட்டவர்கள் தற்போது சத்திரசிகிச்சைக்கு உட்படுத்தப்பட்டுள்ளதாக வைத்தியசாலை வட்டாரங்கள் தெரிவிக்கின்றன.
ஸ்ரீலங்கா பொதுஜன பெரமுன பாராளுமன்ற உறுப்பினர் ஒருவருக்கு சொந்தமானதாக கருதப்படும் வாகனத்தில் வந்த குழுவினால் இந்த துப்பாக்கிச் சூடு நடத்தப்பட்டுள்ளது.
சம்பவ இடத்தில் இருந்த போராட்டக்காரர்களால் வாகனம் தாக்கப்பட்டது.



