அரசாங்கம் வீடு செல்லாவிட்டால் 11 ஆம் திகதி முதல் நாடு முழுவதுமாக முடக்கப்படும் - தொழிற்சங்க ஒருங்கிணைப்பு எச்சரிக்கை

#SriLanka #government
Prasu
4 years ago
அரசாங்கம் வீடு செல்லாவிட்டால் 11 ஆம் திகதி முதல் நாடு முழுவதுமாக முடக்கப்படும் - தொழிற்சங்க ஒருங்கிணைப்பு  எச்சரிக்கை

எதிர்வரும் 6 ஆம் திகதி நடைபெறவுள்ள ஹர்த்தாலின் பின்னர் அரசாங்கம் வீட்டுக்குச் செல்லாவிட்டால் எதிர்வரும் 11 ஆம் திகதி முதல் நாடு முழுவதும் தொடர் ஹர்த்தால் முன்னெடுக்கப்படும் என அறிவிக்கப்பட்டுள்ளது.

தொழிற்சங்க ஒருங்கிணைப்பு நிலையத்தின் இணை அழைப்பாளர் வசந்த சமரசிங்க விடுத்துள்ள விசேட அறிக்கையில் இதனை தெரிவித்துள்ளார்.

எதிர்வரும் 6 ஆம் திகதி அரசாங்கத்திற்கு ஒத்திகை வழங்கப்படவுள்ளதாகவும் அதன் பின்னரும் அரச தலைவர் தலைமையிலான அரசாங்கம் பதவி விலகாவிட்டால் நாடு பூராகவும் சகல துறைகளிலும் தொடர்ச்சியான ஹர்த்தால் முன்னெடுக்கப்படும் எனவும் சமரசிங்க தெரிவித்தார்.

இச்செய்திக்கு பிரதான அனுசரணை

Selva Zug Promotion

வீடியோ இங்கே

Subcribe Lanka4
Like Lanka4
Follow Lanka4
Follow Lanka4