இலங்கையின் இயலுமை தொடர்பில் ஆராய வேண்டும் IMF தெரிவிப்பு
#SriLanka
#Dollar
#IMF
Mugunthan Mugunthan
3 years ago

இலங்கைக்கு எந்தவொரு கடனையும் வழங்குவதற்கு, கடனை மீளச் செலுத்துவதற்கான உறுதிப்பாடு அவசியம் என சர்வதேச நாணய நிதியம் தெரிவித்துள்ளது.
இலங்கைக்கு கடன் வழங்குவதற்கான மாற்றுத்திட்டங்கள் மற்றும் கொள்கை வகுப்பு தொடர்பில் வொஷிங்டன் சென்றுள்ள தரப்பினருடன் இடம்பெற்ற கலந்துரையாடலின் போது, சர்வதேச நாணய நிதியத்தின் இலங்கை தொடர்பிலான குழுவின் தலைவர் மஷிஹிரோ நொசாகி கூறியதாக ரொய்ட்டர்ஸ் செய்தி வெளியிட்டுள்ளது.
இலங்கையில் ஏற்பட்டுள்ள பொருளாதார நெருக்கடியினால் மக்கள் அடைந்துள்ள துயரங்கள் தொடர்பில் சர்வதேச நாணய நிதியம் இதன்போது கவலை வெளியிட்டுள்ளதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.



