ரம்புக்கனை பொலிசாரின் துப்பாக்கிச் சூடு: நேரில் கண்ட சாட்சி

Prathees
4 years ago
ரம்புக்கனை பொலிசாரின் துப்பாக்கிச் சூடு: நேரில் கண்ட சாட்சி

இருபுறமும் கற்கள் வீசப்பட்டன. பக்கத்திலிருந்த வெள்ளைக்காரனை ஓடிப்போகச் சொன்னேன்.
ஓடும்போது அவர் சுடப்பட்டார்  என ரம்புக்கன கொலையை நேரில் கண்ட சாட்சி ஒருவர் கேகாலை நீதவான் வாசனா நவரத்னவிடம் தெரிவித்தார்.

ரம்புக்கனை போராட்டத்தில் பொலிஸாரின் துப்பாக்கிச் சூட்டில் கொல்லப்பட்ட சமிந்த லக்ஷனின் மரணம் தொடர்பில் அதே இடத்தில் நேற்று (20ம் திகதி) நீதவான் விசாரணையின் போது முன்னிலையாகிய நபர்  நேரில் கண்ட சாட்சியமளிக்கும் போதே மேற்கண்டவாறு தெரிவித்தார்.

அவ்வேளையில் சாட்சியமளிக்க சிரமப்படுபவர்களுக்கு இரகசியமாக சாட்சியமளிக்க சந்தர்ப்பம் வழங்கப்படும் என நீதவான் குறிப்பிட்டுள்ளார்.

அவர்களின் பாதுகாப்பு மற்றும் ரகசியத்தன்மையும் பாதுகாக்கப்படும் எனவும் அவர் குறிப்பிட்டார்.

இச்செய்திக்கு பிரதான அனுசரணை

Selva Zug Promotion

வீடியோ இங்கே

Subcribe Lanka4
Like Lanka4
Follow Lanka4
Follow Lanka4