எரிபொருள் பவுசர் உரிமையாளர்களுக்கு முக்கிய அறிவித்தல்
Prabha Praneetha
3 years ago
இலங்கை பெற்றோலிய கூட்டுத்தாபனத்தில் பதிவு செய்யப்பட்ட அனைத்து எரிபொருள் பவுசர் உரிமையாளர்களுக்கும் விசேட அறிவித்தல் விடுக்கப்பட்டுள்ளது.
அதன்படி, போதுமான அளவு எரிபொருள் கையிருப்பு இருப்பதால், எரிபொருள் விநியோக செயல்முறையை விரைவுபடுத்துவதற்காக, குறிப்பிட்ட முனையங்கள் மற்றும் டிப்போக்களுக்கு தங்கள் பவுசர்களை உடனடியாக அனுப்புமாறு தெரிவிக்கப்பட்டுள்ளது.