கொரோனா எப்போது முடிவுக்கு வரும்? ஐ.நா. சபை பொதுச்செயலாளர் தகவல்

#Covid 19
Prasu
4 years ago
கொரோனா எப்போது முடிவுக்கு வரும்? ஐ.நா. சபை பொதுச்செயலாளர் தகவல்

சீனாவின் உகான் நகரில் 2019 டிசம்பரில் கண்டறியப்பட்ட கொரோனா வைரஸ், இப்போது உலகமெங்கும் பரவி நீடித்து வருகிறது. புதிய உருமாறிய கொரோனா வைரஸ்கள் உருவாகி வருகின்றன. இந்த கொரோனா வைரஸ் எப்போது முடிவுக்கு வரும் என்ற கேள்வி எழுந்துள்ளது. 

இதுபற்றி ஐ.நா. சபை பொதுச்செயலாளர் ஆண்டனியோ குட்டரெஸ் கூறியதாவது:-

உலகமெங்கும் ஒவ்வொரு நாளும் 15 லட்சம் பேருக்கு கொரோனா பாதிப்பு ஏற்பட்டு வருகிறது. ஆசியாவில் பெரிய வெடிப்பு பரவுகிறது. ஐரோப்பா முழுவதும் புதிய அலை பரவி வருகிறது. சராசரியாக ஒவ்வொரு 4 மாதங்களுக்கு ஒரு முறை, புதிய வகை கொரோனா பரவி வருகிறது. எனவே, கொரோனா வைரஸ் முடிவுக்கு வருவதில் இருந்து வெகுதொலைவில் உள்ளது.

அரசாங்கங்களும், மருந்து கம்பெனிகளும் எல்லா இடத்திலும் உள்ள ஒவ்வொருவருக்கும் தடுப்பூசி சென்றடைய பணியாற்ற வேண்டும்.

இச்செய்திக்கு பிரதான அனுசரணை

Selva Zug Promotion

வீடியோ இங்கே

Subcribe Lanka4
Like Lanka4
Follow Lanka4
Follow Lanka4