சட்டமா அதிபர் திணைக்களத்தை சுற்றிவளைத்து சட்டத்தரணிகள் போராட்டம்
#SriLanka
#Protest
Prasu
2 years ago
சட்டமா அதிபர் திணைக்களத்திற்கு முன்னாள் சட்டத்தரணிகள் குழுவொன்று ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.
தற்போதைய பொருளாதார நெருக்கடிக்கு முகங்கொடுத்து தற்போதைய ஆட்சியை இராஜினாமா செய்யுமாறு கோரி அவர்கள் போராட்டத்தை ஆரம்பித்துள்ளனர்.
புதுக்கடை நீதவான் நீதிமன்றத்திற்கு முன்பாக இந்தப் போராட்டம் ஆரம்பமானது.
சில முக்கியமான வழக்குகளை வாபஸ் பெறும் சட்டமா அதிபரின் முறைக்கு எதிராக அவர்கள் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டுள்ளனர்.