இலங்கையில் உணவுப் பொருட்களுக்கு தட்டுப்பாடு ஏற்படும் அபாயம்!
#SriLanka
Yuga
3 years ago

அத்தியாவசிய பொருட்கள் இறக்குமதி செய்வதில் ஏற்பட்டுள்ள நெருக்கடி அத்தியாவசிய உணவுப் பொருட்களுக்கு தட்டுப்பாட்டை ஏற்படுத்தலாம் என்ற அச்சத்தை ஏற்படுத்தியுள்ளது.
இலங்கையில் டாலர் தட்டுப்பாடு காரணமாக அத்தியாவசிய உணவு மற்றும் எரிவாயு விநியோகத்தை கடுமையாக பாதித்துள்ளதாக இறக்குமதியாளர்கள் கூறுகின்றனர்.
டொலர் பற்றாக்குறை இறக்குமதி நடவடிக்கைகளுக்கு பாரிய பாதிப்பை ஏற்படுத்தியுள்ளதாக இறக்குமதி யாளர்கள் தெரிவித்துள்ளனர்.
உலகச் சந்தையில் எரிவாயு விலையுடன், ரூபாவின் பெறுமதி வீழ்ச்சியடைந்தமையே இலங்கையில் எரிவாயு பற்றாக்குறைக்குக் காரணம் என லாப் எரிவாயு நிறுவனம் தெரிவித்துள்ளது.
அத்தியாவசிய பொருட்கள் இறக்குமதி செய்வதில் ஏற்பட்டுள்ள நெருக்கடி அத்தியாவசிய உணவு பொருட்களுக்கு தட்டுப்பாடு ஏற்படுத்தலாம் என்ற அச்சத்தை ஏற்படுத்தியுள்ளது.



