வெள்ளைச்சந்தனத்துடன் ஒருவர் வசமாக சிக்கினார்!
#SriLanka
#Arrest
Yuga
3 years ago

பதுளை மாவட்டம், போகஹகும்புர பிரதேசத்தில் மேற்கொண்ட சுற்றிவளைப்பில் 15 கிலோகிராம் 50 கிராம் வெள்ளைச்சந்தனத்துடன் ஒருவரை ஹப்புத்தளை விசேட அதிரடிப் படையினர் இணைந்து கைதுசெய்துள்ளனர்.
போகஹகும்புர பிரதேசத்தைச் சேர்ந்த 27 வயது நபரே இவ்வாறு கைதுசெய்யப்பட்டுள்ளார் என்று பொலிஸ் ஊடகப்பிரிவு தெரிவித்துள்ளது.
குறித்த நபர் வெள்ளைச்சந்தனத்துடன் ஓட்டோ ஒன்றில் பயணித்துள்ள நிலையிலேயே கைதுசெய்யப்பட்டுள்ளார்.



