பருத்தித்துறையில் ஒரு வயதான குழந்தை பலி!
#Point-Pedro
#Hospital
#Death
#Covid 19
Yuga
3 years ago

யாழ்.பருத்தித்துறையில் ஒரு வயதான பெண் குழந்தை கொரோனா தொற்றினால் உயிரிழந்துள்ளதாக சுகாதார பிரிவு தகவல்கள் தெரிவிக்கின்றன.
மயூரன் தனுசியா என்ற ஒரு வயதும் 3 மாதமும் நிரம்பிய பெண் குழந்தை புரையேறிய நிலையில் பருத்தித்துறை ஆதார வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சையளிக்கப்பட்ட நிலையில் உயிரிழந்துள்ளது.
இதனையடுத்து இறப்பின் பின் நடத்தப்பட்ட பி.சி.ஆர் பரிசோதனையில் குழந்தைக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டிருப்பதாக சுகாதார பிரிவு தகவல்கள் தெரிவிக்கின்றன.



