குளிர்கால பனிச்சறுக்கலுக்கும் கொவிட் சான்றிதழ் அவசியம்.

சுவிற்சலாந்தில் 9ம்திகதி நடந்து முடிந்த 24 மணி நேரத்தில் வைத்தியசாலை அனுமதிகளாக 281 பேரும், மரணமடைந்தோர் எண்ணிக்கை 4 காவும் இருந்தது.
சுவிற்சலாந்தில் பனிச்சறுக்கலானது கொவிட் சான்றிதழ் தேவையை தவிர்த்துவிடக்கூடாது என்று கன்டோன் சுகாதார இயக்குனர்கள் தலைவர் லுகஸ் என்ஜெல்பேர்கர் தெரிவித்தார்.
பனிக்கட்டி சறுக்கலும் அங்குள்ள அதற்கான விடுதிகளும் மிகவும் பொழுது போக்கானவைகளுடன் இந்த குளிர்காலத்தில் முக்கியத்துவம் பெறுபவை. அதனால் கொவிட் சான்றிதழ் இங்கு முக்கியத்துவம் பெறுகிறது.
இது பொது போக்குவரத்துக்கு மாறாக உள்ளது, இது அனைவருக்கும் அவசியமானது, என அவர் சுட்டிக்காட்டினார்.
கடந்த குளிர்காலத்தின் போது பனிக்கட்டி சறுக்கலுக்கான விடுதிகள் சுகாதார அதிகாரிகளுடன் மோதலில் ஈடுபட்டிருந்தனர் வெளிவாரியான உணவுண்ணும் இடங்களை யு வரிசையில் வைக்காது திறந்த வெளியில் வைத்திருந்தமைக்கு. இதனால் நாடு முழுவதும் தொற்றுகள் அதிகரித்தன.



