எட்டு லட்சம் பேர் சேர்பியாவில் கோரோனோ தொற்றால் பாதிப்பு
#Covid 19
Prasu
4 years ago

செர்பியாவில் கொரோனா வைரஸ் (கொவிட்-19) பெருந் தொற்றினால், மொத்தமாக எட்டு இலட்சத்துக்கும் மேற்பட்டோர் பாதிக்கப்பட்டுள்ளனர்.
அண்மைய உத்தியோகபூர்வ புள்ளிவிபரங்களின் படி, செர்பியாவில் எட்டு இலட்சத்து 359பேர் பாதிக்கப்பட்டுள்ளனர்.
உலகளவில் கொவிட் தொற்றினால் அதிக பாதிப்பினை எதிர்கொண்ட 41ஆவது நாடாக விளங்கும் செர்பியாவில், இதுவரை ஏழாயிரத்து 468பேர் உயிரிழந்துள்ளனர்.
தற்போதுவரை வைரஸ் தொற்றினால் பாதிக்கப்பட்ட 59ஆயிரத்து 265பேர் அங்குள்ள மருத்துவமனைகளில் சிகிச்சை பெற்று வருகின்றனர். இதில் 129பேரின் நிலை கவலைக்கிடமாக உள்ளது.
இதுவரை வைரஸ் தொற்றிலிருந்து ஏழு இலட்சத்து 33ஆயிரத்து 626பேர் பூரண குணமடைந்து வீடு திரும்பியுள்ளனர்.



