கொரோனா தொற்றுக்குள்ளான 10 குழந்தைகள் உயிரிழப்பு
Nila
4 years ago
கொரோனா தொற்றுக்குள்ளான நிலையில், இதுவரை 10 குழந்தைகள், பொரல்லை சீமாட்டி வைத்தியசாலையில் உயிரிழந்துள்ளனரென, வைத்தியசாலையின் பணிப்பாளர் வைத்தியர் ஜீ.விஜேசூரிய தெரிவித்துள்ளார்.
அத்துடன், 490 குழந்தைகள் கொரோனா தொற்றுக்குள்ளாகியுள்ளனர் என்றும் அவர் தெரிவித்துள்ளார்.
குறித்த குழந்தைகளுள் எந்தவொரு குழந்தைக்கும் வைத்தியசாலைக்குள் வைத்து கொரோனா தொற்றவில்லை என்றும் இவர்கள் அனைவருக்கும் சமூகத்திலிருந்தே தொற்றியுள்ளதென்றும் அவர் தெரிவித்துள்ளார்.