இஸ்ரேலுக்கு ஆயுதங்கள் வழங்கப்படுவது நிறுத்தப்படும் - பைடன்!
#SriLanka
#Tamilnews
#sri lanka tamil news
Dhushanthini K
1 week ago
தெற்கு காசா நகரமான ரஃபாவை இஸ்ரேல் ஆக்கிரமித்தால் இஸ்ரேலுக்கு ஆயுதங்கள் வழங்குவது நிறுத்தப்படும் என அமெரிக்க ஜனாதிபதி ஜோ பைடன் எச்சரிக்கை விடுத்துள்ளார்.
பிரபல ஊடகம் ஒன்றுக்கு வழங்கிய நேர்காணலில் அவர் இந்த விடயத்தை தெரிவித்துள்ளார்.
இதன்போது மேலும் கருத்து வெளியிட்டுள்ள அவர், காசாவில் கடந்த ஏழு மாதங்களாக இடம்பெற்று வரும் தாக்குதலில் அமெரிக்காவின் ஆயுதங்கள் பயன்படுத்தப்பட்டுள்ளதை ஒப்புக்கொண்டுள்ளார்.
அமெரிக்க பாதுகாப்பு செயலாளர் லாயிட் ஆஸ்டின் முன்னதாக ஆயுதங்கள் தாமதத்தை உறுதிப்படுத்தினார்.