உக்ரைன் - ரஷ்ய போர் : எல்லைப்பகுதிகளில் கடத்தப்படும் இராணுவ வீரர்கள்!
ரஷ்யா மற்றும் உக்ரைனில் உள்ள ராணுவ தளங்களுக்கு முன்னாள் ராணுவ வீரர்களை கடத்தும் நடவடிக்கையில் ஈடுபட்டவர்களை கைது செய்யும் நடவடிக்கை தொடங்கப்பட்டுள்ளதாக பாதுகாப்பு அமைச்சகம் தெரிவித்துள்ளது.
குற்றப்புலனாய்வு திணைக்களம் மற்றும் புலனாய்வு பிரிவினர் இணைந்து இந்த நடவடிக்கையை ஆரம்பித்துள்ளதாக பாதுகாப்பு செயலாளர் ஓய்வுபெற்ற ஜெனரல் கமல் குணரத்ன குறிப்பிட்டுள்ளார்.
ஓய்வு பெற்ற போர்வீரர்களை ரஷ்ய-உக்ரைன் போர் முனைக்கு சட்டவிரோத வேலைவாய்ப்பு முகவர்களுடன் அனுப்புவதற்காக மனித கடத்தல் செய்யப்படுகிறது.
அவர்கள் ரஷ்ய இராணுவத்தில் சேர்க்கப்படுவார்கள் என்று இங்கு பல பொய்யான வாக்குறுதிகள் வழங்கப்பட்டுள்ளன. அவர்கள் உக்ரேனிய இராணுவத்தில் சேர்க்கப்படுவதாக கூறப்படுகிறது.
இந்நிலையில்வெளிநாடுகளுக்குச் சென்றவர்களைத் தேடுவதற்கான விசாரணைகளை வெளிவிவகார அமைச்சும் ஆரம்பித்துள்ளதாக ஓய்வுபெற்ற ஜெனரல் கமல் குணரத்ன குறிப்பிட்டுள்ளார்.