மாபிம பகுதியில் புதிய எரிவாயு நிரப்பு நிலையத்தை திறக்கும் லிட்ரோ நிறுவனம்!
#SriLanka
#Tamilnews
#sri lanka tamil news
Dhushanthini K
1 week ago
கடுவெல மாபிம பகுதியில் புதிய எரிவாயு நிரப்பும் நிலையம் நாளை (08) திறந்து வைக்கப்படவுள்ளதாக லிட்ரோ நிறுவனத்தின் தலைவர் முதித பீரிஸ் தெரிவித்துள்ளார்.
இது தொடர்பில் மேலும் கருத்து வெளியிட்டுள்ள அவர், புதிய நிரப்பு முனையம் நாளை திறக்கப்படும்.
தேவைக்கு போதிய வினியோகம் வழங்க, கெரவலப்பிட்டி முனையம் போதாது. நாளொன்றுக்கு 60,000 சிலிண்டர்கள் வெளியிடப்படுகின்றன. ஆகையால் குறித்த நிலையம் திறக்கப்பட்டுள்ளது” எனக் கூறியுள்ளார்.