குற்றச்செயல் ஒன்றுடன் தொடர்புடைய சந்தேகநபர்கள் மூவர் துப்பாக்கியுடன் கைது!
குற்றச் செயல்களுடன் தொடர்புடைய மூன்று சந்தேக நபர்கள் துப்பாக்கியுடன் கைது செய்யப்பட்டுள்ளனர்.
கடந்த ஏப்ரல் மாதம் 16ஆம் திகதி மோதர பொலிஸ் பிரிவில் நபர் ஒருவரை கூரிய ஆயுதங்களால் தாக்கி பலத்த காயங்களை ஏற்படுத்திய குற்றச் செயல் தொடர்பில் விசாரணைகள் ஆரம்பிக்கப்பட்டன.
இதனடிப்படையில், இந்தக் குற்றச் செயலுடன் தொடர்புடைய சந்தேகநபர்கள் இருவர் மற்றும் அதற்கு உறுதுணையாக இருந்த சந்தேக நபர் ஒருவரும் நேற்று (05.05) மோதரை பொலிஸ் உத்தியோகத்தர்களினால் கைது செய்யப்பட்டுள்ளனர்.
கைது செய்யப்பட்ட சந்தேகநபர்கள் 21, 23 மற்றும் 24 வயதுடைய கிம்புலால, புளுமண்டல் மற்றும் வெல்லம்பிட்டிய பிரதேசங்களைச் சேர்ந்தவர்கள்.
இந்தக் குற்றச் செயல் தொடர்பில், மோதர கடற்கரையில் கைது செய்யப்பட்ட சந்தேகநபர்களில் ஒருவரிடம் 25 கிராம் 300 மில்லிகிராம் ஹெரோயின் இருந்ததும், சந்தேகநபரிடம் மேற்கொள்ளப்பட்ட மேலதிக விசாரணைகளின் போது, ராகம பகுதியிலுள்ள வீடொன்றில் மறைத்து வைக்கப்பட்டிருந்த T-56 துப்பாக்கி ஒன்றும் கண்டுபிடிக்கப்பட்டது.
அவர் தற்காலிகமாக தங்கியிருந்த இடத்தில், 2 தோட்டாக்கள் மற்றும் T - 265 ரக 56 ரவைகள், 23 ரக 09 mm தோட்டாக்கள் மற்றும் இரண்டு மோட்டார் சைக்கிள்கள் கைப்பற்றப்பட்டுள்ளன.
மற்றைய சந்தேகநபர் குற்றத்தை செய்ய வந்த முச்சக்கரவண்டியின் சாரதியான குற்றத்திற்கு ஆதரவான சந்தேகநபரிடம் இருந்து 15 கிராம் 700 மில்லிகிராம் ஹெரோயின் கண்டுபிடிக்கப்பட்டுள்ளது.
இதேவேளை, மற்றுமொரு சந்தேக நபரிடம் இருந்து 15 கிராம் 700 மில்லிகிராம் ஹெரோயின் கைப்பற்றப்பட்டுள்ளது.
மோதர பொலிஸார் மேலதிக விசாரணைகளை மேற்கொண்டு வருகின்றனர்.