ஹொரண பகுதியில் துப்பாக்கிச்சூடு : சந்தேகநபர்கள் தப்பியோட்டம்!
#SriLanka
#GunShoot
#Tamilnews
#sri lanka tamil news
Dhushanthini K
1 week ago
ஹொரண கிரேஸ்லண்ட்வத்த பிரதேசத்தில் துப்பாக்கிச் சூடு சம்பவம் ஒன்று இடம்பெற்றுள்ளது.
சொகுசு வண்டியில் பயணித்த நபர் மீது துப்பாக்கிச் சூடு நடத்தப்பட்டுள்ளது.
மோட்டார் சைக்கிளில் வந்த இருவரே துப்பாக்கிச் சூட்டை நடத்திவிட்டு தப்பிச் சென்றிருக்கலாம் என சந்தேகிக்கப்படுகிறது.
துப்பாக்கிச் சூட்டில் காயமடைந்த நபர் சிகிச்சைக்காக ஹொரண ஆதார வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளார்.
சம்பவம் தொடர்பான மேலதிக விசாரணைகளை ஹொரண பொலிஸார் மேற்கொண்டு வருகின்றனர்.